யோசுவா 15

1 6 Jos 15 1 யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன்வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.
2 6 Jos 15 2 தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி,
3 6 Jos 15 3 தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும்போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னெயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப்போய்,
4 6 Jos 15 4 அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்.
5 6 Jos 15 5 கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனை துவக்கி,
6 6 Jos 15 6 பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,
7 6 Jos 15 7 அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத், தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்திற்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
8 6 Jos 15 8 அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,
9 6 Jos 15 9 அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
10 6 Jos 15 10 பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
11 6 Jos 15 11 அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.
12 6 Jos 15 12 மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
13 6 Jos 15 13 எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான்.
14 6 Jos 15 14 அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,
15 6 Jos 15 15 அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.
16 6 Jos 15 16 கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
17 6 Jos 15 17 அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான்.
18 6 Jos 15 18 அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவுபெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள்; காலேப் பார்த்து; உனக்கு என்னவேண்டும் என்றான்.
19 6 Jos 15 19 அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
20 6 Jos 15 20 யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்:
21 6 Jos 15 21 கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், எதேர், யாகூர்,
22 6 Jos 15 22 கீனா, திமோனா, அதாதா,
23 6 Jos 15 23 கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
24 6 Jos 15 24 சீப், தேலெம், பெயாலோத்,
25 6 Jos 15 25 ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
26 6 Jos 15 26 ஆமாம், சேமா, மொலாதா,
27 6 Jos 15 27 ஆத்சார்சுவால், எஸ்மோன், பெத்பாலேத்,
28 6 Jos 15 28 ஆத்சார்சுவால், பெயெர்செபா, பிஸ்யோத்யா,
29 6 Jos 15 29 பாலா, ஈயிம், ஆத்சேம்,
30 6 Jos 15 30 எல்தோலாத், கெசீல், ஒர்மா,
31 6 Jos 15 31 சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
32 6 Jos 15 32 லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.
33 6 Jos 15 33 பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
34 6 Jos 15 34 சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
35 6 Jos 15 35 யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
36 6 Jos 15 36 சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினான்கு.
37 6 Jos 15 37 சேனான், அதாஷா, மிக்தால்காத்,
38 6 Jos 15 38 திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
39 6 Jos 15 39 லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
40 6 Jos 15 40 காபோன், லகமாம், கித்லீஷ்,
41 6 Jos 15 41 கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.
42 6 Jos 15 42 லிப்னா, ஏத்தேர், ஆஷான்,
43 6 Jos 15 43 இப்தா, அஸ்னா, நெத்சீப்,
44 6 Jos 15 44 கேகிலா, அக்சீப், மரேஷா; இநதுப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
45 6 Jos 15 45 எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
46 6 Jos 15 46 எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
47 6 Jos 15 47 அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.
48 6 Jos 15 48 மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,
49 6 Jos 15 49 தன்னா, தெபீர் என்னப்பட்ட கிரியாத்சன்னா,
50 6 Jos 15 50 ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
51 6 Jos 15 51 கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.
52 6 Jos 15 52 அராப், தூமா, எஷியான்,
53 6 Jos 15 53 யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
54 6 Jos 15 54 உம்தா, எபிரோனாகிய கீரியாத்அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
55 6 Jos 15 55 மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
56 6 Jos 15 56 யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
57 6 Jos 15 57 காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பத்து.
58 6 Jos 15 58 அல்கூல், பெத்சூர், கெதோர்,
59 6 Jos 15 59 மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
60 6 Jos 15 60 கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.
61 6 Jos 15 61 வனாந்தரத்தில், பெத்அரபா, மித்தீன், செக்காக்கா,
62 6 Jos 15 62 நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
63 6 Jos 15 63 எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமில் குடியிருக்கிறார்கள்.