83. நல்லது, என் அருமை சகோதரியே, நீ ஒரே ஒரு காரியத்தை மட்டும் சரியாகச் செய்திருக்கிறாய். நீ அதில் ஈடுபட்டாய் என்று நினைக்கிறேன், அல்லது உனக்குத் தெரிந்த யாரோ ஒருத்தி இந்த தவறான செயலில் ஈடுபட்டிருக்கிறாள். நீ வேறொரு ஸ்திரீயின் துணைவருடன் இந்த சமூக செயலைச் செய்திருக்கிறாய். நீ அதைச் செய்த போது கிருபையிலிருந்து விழுந்து விட்டாய். அதன் பிறகு நீ மனந்திரும்பினாய். நீ அந்த மனிதனிடம் சென்று அதை சரி செய்து கொள்ளும் வரைக்கும் உன்னால் மனந்திரும்ப முடியாது. நீ அந்த செயலில் ஈடுபட்ட அந்த மனிதனிடம் உன் கணவரையும் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். அந்த காரியத்தை தான் நீ செய்திருக்க வேண்டும். அது தான் வேதப் பிரகாரமானது.
84. இங்குள்ள லூயிவில்லில் வசிக்கும் ஒருத்தி என்னிடம் வந்திருந்தாள். அவள் ஒரு வாலிபப் பெண். அவள் ஒரு மனிதனுடன் தொடர்பு கொண்டிருந்தாள். அதன்பிறகு அவள்... அவள் செய்வது தவறென்று அறிந்து கொண்டாள். எனவே அவள் நகரத்தை விட்டு, தூரத்திலுள்ள வேறொரு நகரத்துக்கு சென்று, அவளுடைய பெயரை மாற்றிக் கொண்டு, அங்கிருந்த சிலருடன் வாழ்ந்து வந்தாள். இந்த மனிதன் அவளைப் பின்தொடர்ந்து அங்கு அடைந்து அவளிடம், அவள் மேல் இந்த சுமை உள்ளதென்றும், அவள் அவனுக்கு மனைவியாக நடந்து கொள்ள வேண்டுமென்றும், இல்லையென்றால் அவன் இந்த விவகாரத்தைக் குறித்து கூறிவிடுவானென்றும் பயமுறுத்தினான் (அவள் அந்த இடத்தில் ஒரு அருமையான கிறிஸ்தவனை மணந்து கொண்டாள்). அவள் அவ்விதம் நடந்து கொள்ளாவிட்டால் அவன் முழு விவகாரத்தையும் அம்பலப்படுத்தி விடுவதாக மிரட்டினான். எனவே அவள் தொடக்கத்தில் தன் நிறத்தைக் காண்பிப்பதற்கு பதிலாக இந்த இரு மனிதருக்கும் வாழ்க்கைப்பட வேண்டியதாயிற்று. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கு இப்பொழுது பதினெட்டு வயதாகின்றது. இவர்களில் யார் அவளுடைய தகப்பன் என்று அவளுக்குத் தெரியாது. இப்பொழுது அவளுடைய மாதவிடாய் நின்று விட்டது, அது அவளுக்கு நேர்ந்து விட்டது. இப்பொழுது அவளால் என்ன செய்ய முடியும்? நான், "நீ செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று " என்றேன்.
அவள், "என் கணவரிடம் இதைப் பற்றி கூறினால், அவர் என்னை விட்டுப் போய் விடுவார். என் மகள் அறிந்தால், அவள் தற்கொலை செய்து கொள்வாள்" என்றாள்.
85. நான் அவளிடம், "இதை நீ மனதிலே வைத்துக் கொண்டிருந்தால், நீ நரகத்துக்குப் போவாய். இப்பொழுது, நீ எதை வேண்டுமானாலும் தெரிந்து கொள்" என்றேன். செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் அதை துடைத்து சரிபடுத்திக் கொள்வதே. அது முற்றிலும் உண்மை. உண்மையுள்ளவளாயிரு.
86. உங்களுக்குத் தெரியும், அநேக சமயங்களில், ஸ்திரீகளும் மனிதரும் வரும்போது, தரிசனங்களில், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் வாழ்க்கையில் செய்தவைகளை தோண்டி எடுத்து வெளிப்படுத்துவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், கண்டிருக்கிறீர்கள், அது உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதையும் அவர் அவர்களிடம் எடுத்துரைத்திருக்கிறார்.
அவர்கள், "நல்லது, நான் அதை ஏற்கனவே கர்த்தரிடம் சரி செய்து கொண்டு விட்டேன்" என்கின்றனர். ஆனால் நீங்கள் உங்கள் கணவரிடமோ அல்லது உங்கள் மனைவியிடமோ சென்று அவர்களிடம் இதைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். அது உண்மை. நீங்கள் அதை அறிக்கை செய்ய வேண்டும்.
87. இப்பொழுது, இந்த நபர், அவள் குற்றவாளியாயிருப் பாளானால், அவள் அதைச் செய்து விட்டாள்; அவள் தன் கணவரிடம் சென்று அறிக்கை செய்து விட்டாள். இப்பொழுது, சகோதரியே, உன்னை நீ சுத்தப்படுத்திக்கொண்டு விட்டாய், ஏனெனில் இடையில்... நீ உன் கணவருக்கு விரோதமாக விபச்சாரம் செய்தாய், நீ உன் கணவரிடம் சென்று அறிக்கையிட்டு உன்னை சுத்தப்படுத்திக்கொண்டு விட்டாய். அதன் பிறகு அந்த மனிதனிடமும் சென்று அங்கேயும் அதை சரிசெய்து கொண்டு விட்டாய். நீ சுத்தமாயிருக்கிறாய். உன் கணவர் உன்னுடன் தொடர்ந்து வாழ விரும்பினால், நீ மறுபடியும் அப்படிப்பட்ட குற்றத்தைச் செய்யாதபடிக்கு நற்பண்புள்ளவளாயிரு, அவர் அக்குற்றத்தை மன்னிக்காவிட்டால், அது அவருடைய சொந்த விஷயம். அவர் உன்னைத் தள்ளிவிடலாம். முற்றிலும் உண்மை.
88. இப்பொழுது, அச் செயலில் நீ ஈடுபட்ட அந்த மனிதன், அவர்தான் தன் மனைவியிடம் சென்று அவளை உன்னிடம் கூட்டிக் கொண்டு வர வேண்டும். உன் பாகத்தை நீ செய்து விட்டாய், அவர் தன்னுடைய பாகத்தை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பார்?
89. இந்த ஸ்திரீ அந்த மனிதனுடன் அந்த செயலில் ஈடு பட்டாள். அவள் தன் கணவரிடம் சென்று அதை அறிக்கையிட்டு விட்டு, அந்த மனிதனிடமும் சென்று அதை அறிக்கையிட்டு விட்டு, அதை சரி செய்து கொண்டு விட்டாள். அந்த மனிதனும் விவாகமானவர். இப்பொழுது அவர் தன் மனைவியிடம் சென்று அவளைக் கூட்டிக் கொண்டு இந்த ஸ்திரீயிடம் வரவேண்டும். அப்பொழுது அது சரியாகி விடும். நான் கூறுவது விளங்குகிறதா? அப்பொழுது அது தீர்ந்து விடும். அதை செய்யாமல் போனால், உன் இருதயம் உன்னைக் குற்றப்படுத்திக் கொண்டிருக்கும்.
90. அண்மையில், முதலாம் உலகப் போர் முதற் கொண்டு இப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்த ஒரு ஸ்திரீ என்னிடம் வந்திருந்தாள். அவள், “ஓ, சகோ. பிரன்ஹாமே" என்றாள். அவள் மனநிலை நிபுணர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழித்து விட்டாள். அங்கு நான் உட்கார்ந்து கொண்டு அந்த அறையில் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். மேடா அவளை இங்கு கொண்டு வந்திருந்தாள். அவள் அங்கு உட்கார்ந்து கொண்டு, கைக் குட்டையை தன் கையில் இப்படி பிசைந்து கொண்டு, “உலகம் வெடித்து விடப் போகிறது போன்ற உணர்வு எனக்கு உண்டாகிறது. நான்...' என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருந்தாள்.
நான் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் “இது ஏதோ ஒன்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது. உன் வாழ்க்கையில் எங்காவது ஏதாகிலும் நடந்ததுண்டா?" என்று கேட்டேன்.
அவள், "இல்லை, நான் ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியை" என்றாள்.
நான், “சரி” என்றேன். அங்கு சிறிது உட்கார்ந்து கொண்டு அவளைக் கவனித்தேன். "நான் பச்சை நிறக் கார் ஒன்றைக் காண்கிறேன், நீ வெள்ளை தலைமயிர் கொண்ட ஒரு மனிதனுடன் அதில் இருக்கிறாய். ஒரு ரயில் வண்டி ஏறக்குறைய அந்த காருடன் மோதி விட்டது" என்றேன்.
அவள், “அதை யாரிடமும் சொல்லாதீர்கள்" என்றாள்.
நான், “உன் கணவர் அப்பொழுது இராணுவத்தில் இருந்தார்" என்றேன்.
அவள் அழுது புலம்பி மேலே குதித்தாள். “அதை யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றாள். பாருங்கள்? அது அவள் உள்ளுணர்வில் குடி கொண்டிருந்தது. அவள், "நான் நீண்ட காலத்துக்கு முன்பே அதை தேவனிடம் அறிக்கை செய்து விட்டேன்" என்றாள்.
91. நான் “ஒரு நிமிடம் பொறு. நீ தேவனுக்கு விரோதமாக தவறு செய்யவில்லை. உன் விவாகப் பொருத்தனைக்கு விரோதமாக நீ ஒரு பாவத்தைச் செய்திருக்கிறாய். நீ உன் கணவரிடம் சென்று அதை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும்” என்றேன்.
அவள், “அவர் என்னை விட்டுப்போய் விடுவார்" என்றாள்.
நான், “தேவன் எப்படியும் உன்னை விட்டு போய் விட்டார். இப்பொழுது, யார் உன்னை விட்டு போக வேண்டுமென்று நினைக்கிறாய்? உன் கணவரிடம் போ” என்றேன்.
அவள், “ஓ, நான்- நான்... அவர் இதை செய்வார், எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்" என்றாள்.
நான், "நல்லது. இவ்வளவு தான் நான் உன்னிடம் கூற முடியும். மன நிலை நிபுணர் அதை உனக்குள்ளிருந்து வெளியே கொண்டு வரவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தினார். உன்னை நான் என் வாழ்க்கையில் கண்டதேயில்லை" என்றேன்.
அவள், “அது முற்றிலும் உண்மையே. நல்லது. நான் அவரிடம் கூற முடியாது" என்றாள்.
நான், "நல்லது. நான்... உன்னை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டு, அடுத்த அறைக்குச் சென்று விட்டேன். மேடா அங்கு வந்தாள்.
மேடா, "அவள் உங்களைக் காண விரும்புகிறாள்" என்றாள். நான் அங்கு சென்று, “உனக்கு என்ன வேண்டும்?” என்றேன்.
அவள், “சகோ. பிரன்ஹாமே, அதை என் கணவரிடம் என்னால் கூற இயலாது” என்றாள்.
நான், “உன் கணவர் கறுப்பு தலைமயிர் கொண்டவர்" என்றேன். “ஆம்."
நான், “அதேவிதமான ஒரு காரியத்தை அவர் உன்னிடம் அறிக்கை செய்ய வேண்டியவராயிருக்கிறார்" என்றேன்.
அவள், “ஓ, என் கணவர் அப்படிப்பட்டவர் அல்ல” என்றாள்.
நான், "நீ போய் அவரை இங்கு கூட்டிக் கொண்டு வா. ஒரு குறிப்பிட்ட ஸ்திரீ உனக்குத் தெரியுமா, அவள் 'பிங்க்' நிற ஆடை அணிவதுண்டு. அவள் ஒரு குறிப்பிட்ட மோட்டார் வாகன நிர்வாகத்தின் அலுவலகத்தில் வேலை செய்கிறாள்" என்றேன்.
அவள், "நிச்சயமாக" என்றாள்.
நான், “அவளை ஒரு குறிப்பிட்ட பெயரால் அழைக்கிறார்கள் அல்லவா?" என்றேன்.
“ஆம்."
நான், “இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் ஒரு 'பீச்' (beech) மரத்தின் அடியில் ஒரு பழுப்பு நிற ஷெவர்லே காரில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதன் லைசென்ஸ் நம்பர் இன்னின்னது. அவர்கள் அதே செயலில் ஈடுபட்டிருந்தனர்" என்றேன்.
அவள், "அது என் கணவராக இருக்காது" என்றாள். நான், "சரி, அவரை இங்கு கூட்டிக் கொண்டு வா" என்றேன்.
அவள் சென்றாள். சில நிமிடங்கள் கழித்து அவர்கள் இருவரும் வந்தனர். அவர், "அது உண்மை " என்றார்.
நான், “பார்த்தாயா? நீ போய் தேவனிடம் சொல்" என்றேன்.
92. ஆனால் முதலாவதாக, நீ பலிபீடத்தினிடத்தில் வரும் போது, குறை உண்டென்று கண்டால், நீ போய் அதை சரி செய். அந்த நபர் தன் மனைவியிடம் அதை கூறாமல் குற்றவாளியாயுள்ள வரைக்கும்... இந்த மனைவி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாள். இப்பொழுது அது மற்ற பெண்ணையும் அவளுடைய கணவரையும் பொறுத்தது. இந்த மற்ற மனிதனும் அவருடைய மனைவியும் அதை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். உன்னால் முடியாது... நீ என்ன செய்த போதிலும், நீ அதை சுத்தமாக கழுவிக் கொள்ளாவிட்டால், அது உன்னை உன் வாழ்நாள் முழுவதும் அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும். அதைச் செய்வதற்கு ஒரே வழியுண்டு; அதை அறிக்கை செய். அது உன் தோலை உரித்தாலும், அதை எப்படியும் செய். உண்மையைச் சொல், அப்பொழுது நீ அதை சரியாக பெற்றுக் கொண்டாய். ஆமென்!
93. இந்த ஒலிநாடாவைக் கேட்கும் அநேகர், “இது தவறு" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அதை ஒருமுறை முயன்று பார்த்து அது சரியா என்பதைக் கண்டுக் கொள்ளுங்கள். சரி.